திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழு
கூட்டம் மாவட்ட தலைவர் கிருபாகரன் தலைமையில் திண்டுக்கல்லில் நடந்தது.
பொருளாளர் முகமது கனி, இணை செயலாளர்கள் நஷீர் சேட், கருணாகரன் பேசினர்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் அனைத்து வியாபாரிகளும்
வரும் பிப்., 4 ம் தேதிக்குள், உரிமம் பெற்றிருக்க வேண்டுமென மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது. இதற்கான காலக்கெடுவினை மேலும் நீடிக்க வேண்டுமென
வணிகர்கள் சங்கம் சார்பில் மத்திய அமைச்சர் குலாம்நபிஆசாத்திடம் மனு
அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள்
வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளனர்.இது தவிர வணிக
வரித்துறையில் இருந்து பல்வேறு புதிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென
வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு பிரச்னைகளால் அனைத்து வணிகர்களுக்கும்
நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளில் இருந்து தீர்வு காண்பதற்காக
வணிக வரித்துறை அலுவலர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி, அவர்களின்
ஆலோசனையை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது, என, தெரிவிக்கப்பட்டது. செயலாளர்
முருகேசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment