மினரல் வாட்டர் ஆலைக்கு "சீல்’

மதுரை புதூர் தி.மு.க., நிர்வாகி நாகராஜ். கடச்சனேந்தல்-ஒத்தக்கடை ரோட்டில் "அக்வா ரியல்’ மினரல் வாட்டர் ஆலை நடத்துகிறார். தரச்சான்று இன்றி ஆலை இயங்கியது தெரிந்தது. உணவு தடுப்பு மற்றும் மருந்து நியமன அலுவலர் சுகுணா தலைமையில் அலுவலர்கள் ஆலைக்குசீல் வைத்தனர்.
டாக்டர் சுகுணா கூறியதாவது: சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலை அமைக்க ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற வேண்டும். சான்று பெறாத பலர் மூலிகை தண்ணீர் பெயரில் "மினரல் வாட்டர்’ என விற்கின்றனர். இதற்கு டில்லி குடிநீர் பாதுகாப்பு மையத்தில் அனுமதி மற்றும் தரச்சான்று பெற வேண்டும் என, பசுமை தீர்ப்பாயம் 5 மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. தரச்சான்று இன்றி ஆலை செயல்பட்டதால், சீல் வைக்கப்பட்டது, என்றார்.

No comments:

Post a Comment