குழந்தையின் லஞ்ச் பாக்ஸ்... குவிந்திருக்கும் ஆபத்து!

 பெற்றோர்களே... உங்களில் எத்தனை பேர், உங்கள் குழந்தையின் மதிய உணவு விஷயத்தில் அக்கறையுடன் செயல்படுகிறீர்கள்?
நீங்கள் பள்ளிக்குக் கொடுத்து அனுப்பும் உணவை, உங்களின் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்று உங்களால் உறுதிபடுத்த முடியுமா?
அவர்கள் சாப்பிடுவது எல்லாம் சத்தான உணவுதானா?
தவறான உணவுப் பழக்கத்தினால், குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் விளையவிருக்கும் கேடுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
- இப்படிப்பட்ட கேள்விகளில் சிலவற்றை எப்போதாவது நீங்கள் எழுப்பியிருக்கலாம். ஆனால், எத்தனை பேர் இவற் றுக்கான சரியான பதில்களைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள்?
இந்திய நுகர்வோர் சங்கம், ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக வணிகப் பள்ளியுடன் இணைந்து, பள்ளி மாணவர்களின் மதிய உணவு பற்றி சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், மேலே உள்ள கேள்விகளுக்கான விடைகள் கிடைத் துள்ளன. அந்த விடைகள், எதிர்கால இந்தியா குறித்த கவலையைக் கூட்டுவதாகவே அமைந்திருப்பதுதான் கொடுமை!
சென்னை, 'இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷனல் சயின்ஸஸ்' நிறுவனத்தின் 'ஊட்டச்சத்து நிபுணர்' டாக்டர்  வர்ஷா, சென்னை, 'தேவி அகாடமி' தலைமை ஆசிரியை மாலதி ஸ்ரீனிவாசன் உள்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் இடம்பெற்ற இக்குழுவின் ஆய்வு மூலம்... குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோரின் கவனக்குறைவு, பள்ளிகளின் பொறுப்பின்மை இரண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
''இன்றைய மாணவர்கள்தான், நாளைய சமுதாயம். எனவே மாணவர்களிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை வளரச் செய்வதற்கும், நொறுக்குத் தீனியின் (ஸ்நாக்ஸ் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட்ஸ்) தீமைகளை அறியச் செய்வதற்கும், நன்மை அல்லது தீமை தரும் உணவுகளைப் பற்றி எடுத்துச் சொல்வதற்கும், பாதுகாப்பான உணவுகளையே உண்ண வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கும்தான் இந்த ஆய்வு.
சிட்னி பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் தெரேஸா டேவிஸ், 'சென்னையிலிருக்கும் பள்ளிக்கூட மாணவர்களின் மதிய உணவை வைத்து ஆய்வை மேற்கொள்ளலாம்' என்றார். அதற்காக பல பள்ளிகளை அணுகினோம். ஏராளமான பள்ளிகள் சம்மதிக்காத நிலையில், மாநகராட்சி பள்ளிகள், சி.பி.எஸ்.இ பள்ளிகள் மற்றும் இதர ஆங்கில வழிக்கல்வி பள்ளிகள் என மொத்தம் 25 பள்ளிகள் எங்களின் ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தன. ஒரு பள்ளிக்கூடத்துக்கு 12 மாணவர்கள் (6 மாணவர்கள், 6 மாணவிகள்) வீதம், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் பங்கேற்ற இந்த ஆய்வை, கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கி, டிசம்பர் வரை நடத்தினோம்'' என்று இந்த ஆய்வு பற்றி நம் மிடம் பேசிய இந்திய நுகர்வோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜன், இதன் மூலம் கிடைத்த அதிர்ச்சித் தகவல்களை அடுக்கினார்.
லஞ்ச் பாக்ஸில்... ரெஸ்டாரன்ட் உணவு!
''மொத்தம் 300 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இந்த ஆய்வில் 55.7% பேர் பெண்கள். இவர்கள் கொண்டு வந்த மொத்த உணவு வகைகள் 2,941. இவற்றில் 8% மட்டுமே மாமிச உணவு வகையைச் சேர்ந்தவை. பெரும்பான்மையானோர் புளிசாதம், எலுமிச்சைசாதம், தயிர்சாதம் என தென்னிந்திய அரிசி உணவு வகைகளையே கொண்டு வந்தனர். சில மாணவர்கள் வறுவல், பீட்ஸா உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளையும் மதிய உணவாக கொண்டு வந்தனர். சில குழந்தை கள், கோலா உள்ளிட்ட பானங்களையும் குடிக்கக் கொண்டு வந்திருந்தனர்.
மொத்த மாணவர்களில் 87.7% பேர் வீட்டில் அம்மா செய்து கொடுத்த உணவையும், 7.3% பேர் பாட்டி உள்ளிட்ட மற்றவர்கள் செய்து கொடுத்த உணவையும், மீதமுள்ள 5% குழந்தைகள் ஹோட்டல் உள்ளிட்ட வெளிப்புற உணவையும் கொண்டு வந்திருந்தனர். இதில் வேதனையான ஒரு விஷயம், சில குழந்தைகள் பிரபல சிக்கன் உணவகத்தின் உணவுகளையும், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பான வகைகளையும் கொண்டு வந் திருந்தனர். சத்துமிகுந்த பழங்கள், காய்கறி களை, கைவிட்டு எண்ணக்கூடிய குழந்தைகளே எடுத்துவந்தார்கள்.
84.3% குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த உணவை விரும்பிச் சாப்பிட்டார்கள். மீதமுள்ள குழந்தைகள் வேண்டா வெறுப்போடு சாப்பிட்டார்கள். சில குழந்தைகள் மதிய உணவைச் சாப்பிடவே விரும்பாதவர்களாக இருந்தார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம்... அதிக சதவிகித குழந்தைகள், சத்தான உணவுகளைக் கொண்டு வராததோடு, கொண்டு வரும் உணவையும் பிளாஸ்டிக் போன்ற ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்களில்தான் எடுத்து வந்தார்கள்'' என்றவர், 'லஞ்ச் பாக்ஸ்’ விஷயத்தில் பெற்றோர், பள்ளி நிர்வாகம் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டினார்.
நூடுல்ஸ்... பர்கர்!
''பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்குக் கொண்டுவரும் உணவுகள், பெற்றோர்களின் விருப்பப்படியே அமைகிறது. அதிகமான பெற்றோர்... காலை நேர பரபரப்பில் கட மையே என்று ஏதாவது ஒரு உணவைத் தயா ரித்து கொடுத்து அனுப்புபவர்களாகவும், அது சத்தானதாக, ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதில் எந்தவித அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. பெரும்பாலான பள்ளிகள், குழந்தைகளின் மதிய உணவு விஷயத்தில் தலையிடுவதை விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளின் உணவுப் பழக்கத்துக்கு வீடு, பள்ளி என இரண்டு இடங்களிலுமே ஒரு கடிவாளம் இல்லை. இதனால் சில குழந்தைகள் பர்கர், பீட்ஸா, நூடுல்ஸ், கோலா என்று அதிக ஆபத்துக்களை விளைவிக்கக்கூடிய உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதுடன், அதையே மதிய உணவாக பள்ளிக்கும் எடுத்து வருகிறார்கள்.
இப்படி பாதிப்புகளை விளைவிக்கக்கூடிய நொறுக்குத்தீனி வகைகளையும், கொழுப்பு உணவுகளையும், உடல் பருமன் உண்டாக்கக் கூடிய உணவுகளையும், ஊட்டச்சத்து இல் லாத உணவுகளையும், உடல் நலத்தை கெடுக் கக்கூடிய உணவுகளையும் தொடர்ந்து சாப் பிட்டு வருகின்றனர்'' என்ற ராஜன், அதன் விளைவுகளை விளக்கினார்.
மரணத்தை நோக்கி இழுக்கும் நொறுக்குத்தீனி!
''மலேரியா, அம்மை, பிளேக் போன்ற நோய்களின் காலம் மலையேறிவிட்டது. சர்க்கரை, உப்பு, கொழுப்பு, காஃபின், மாவுச்சத்து, அதிக கலோரிகள்... இதுபோன்றவையே, இன்றைக்கு 'தொற்றாத நோய்கள்' எனப்படும் இதயநோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றுக்குக் காரணமாக அமைகின்றன. குழந்தைகள் அருந்தும் பானங்களில் உள்ள சிலவகை அமிலங்கள், பல்லைக்கூட கரைக்கும் தன்மை கொண்டவை. மேலும் குழந்தைகளின் ஆதரவைப் பெற, இதுபோன்ற பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எக்கச்சக்கமான விளம்பரங்களைச் செய்கின்றன... இலவச பொருட்களையும் அள்ளித் தருகின்றன. அதனால் குழந்தைகள் விரும்பிக் கேட்க, பெற்றோரும் மறுக்காமல் வாங்கித் தருகிறார்கள்... நோய், நொடிகளையும் சேர்த்தே வாங்கித் தருகிறோம் என்கிற பயங்கரம் புரியாதவர்களாக!இப்படி பாதிப்புகளை விளைவிக்கக்கூடிய நொறுக்குத்தீனி வகைகளையும், கொழுப்பு உணவுகளையும், உடல் பருமன் உண்டாக்கக் கூடிய உணவுகளையும், ஊட்டச்சத்து இல் லாத உணவுகளையும், உடல் நலத்தை கெடுக் கக்கூடிய உணவுகளையும் தொடர்ந்து சாப் பிட்டு வருகின்றனர்'' என்ற ராஜன், அதன் விளைவுகளை விளக்கினார்.

இன்னொரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், இப்போது இந்தியாவில் ஆண்டுக்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நொறுக்குத்தீனி மட்டுமே விற்பனை ஆகிறதாம். இதை அதிகமாக குழந்தைகள்தான் உட்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட நொறுக்குத்தீனிகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால், குழந்தைகளின் உடல்பருமன் அதிகரிக்கிறது. விளைவு எதுவரை செல்கிறது என்றால், புகைப்பிடித்தலுக்கு அடுத்தபடியாக இந்த உடல் பருமன்தான் இறப்புக்குக் காரணமாக அமைகிறதாம். 'கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளிடம் உடல் பருமன் மும் மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே இதய நோய்க்கான மிகமுக்கியக் காரணியாக இருக்கிறது' என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 'நொறுக்குத் தீனிகள் மிக விரைவில் உடலில் உள்ள ஈரலையும் பாதிப்படையச் செய்கின்றன' என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
கோலா பானங்கள், கூடவே கூடாது!
இன்றைக்கு 'சக்தி தரும் பானங்கள்’ என்று அழைக்கப்படும் பலவகை பானங்களை, குழந்தைகள் விரும்பிப் பருகுகிறார்கள். அதில் கபீன், ஜின்ஸெங், டாரின், இனோசிடால் மற்றும் கோடமைன் போன்றவை உள்ளன. நாம் அன்றாடம் குடிக்கும் 250 மில்லி காபியில், 80-150 மில்லி கிராம் கபீனும், 250 மில்லி தேநீரில் 60 மில்லி கிராம் கபீனும், 250 மில்லி கோலா பானங்களில் 300-500 மில்லி கிராம் கபீனும் உள்ளன. இது, மனஅழுத்தம், தூக்கமின்மை, கவலை, தலைவலி ஆகியவற்றை அதிகப்படுத்துவதோடு, மத்திய நரம்பு மண்டலத்தையும் அதிர்வடையச் செய்கிறது. சில பானங்கள் அதிக அளவில் எலும்பு தேய்மானத்தையும், பருமன் அதிகரிக்கவும், இரண்டாம் நிலை நீரழிவு நோய் அதிகரிக்கவும், சிறுநீரக பாதிப்பு ஏற்படவும், பற்சிதைவு மற்றும் பலவித பல் உபாதைகள் ஏற்படவும் காரணமாக இருக்கின்றன. இதிலிருந்தெல்லாம் குழந்தைகளை மீட்பதற்கு ஆரோக்கியமான உணவுகளைத் தரவேண்டும். நொறுக்குத்தீனி, துரித உணவுகள், கோலா பானங்களுக்கு கண்டிப்புடன் 'நோ’ சொல்ல வேண்டும்'' என்று அக்கறை பொங்கச் சொன்னார் ராஜன்.

தலைமையாசிரியை மாலதி ஸ்ரீனிவாசன் பேசும்போது, ''ஒவ்வொரு பள்ளியிலும் 5 நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் தயங்கிய மாணவர்கள், இதன் முக்கியத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டு ஆர்வத்துடன் ஆய்வில் பங்கேற்றனர். உணவு விஷயத்தில் தங்களின் தவறுகளைப் புரிந்துகொண்டு மாற்றிக்கொள்ளவும் தொடங்கினர். 'இனி, இதுபோன்ற உணவு வகைகளை உண்ணவே மாட்டோம்' என்று உறுதிபடச் சொன்ன மாணவர்கள், 'எங்களின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட எல்லோரிடமும் இதையெல்லாம் எடுத்துச் சொல்லி, அவர்களுக்கும் புரியவைப்போம்' என்றும் சொன்னார்கள். இதுதான் எங்களுக்குக் கிடைத்த வெற்றி. இந்தக் கட்டுரையைப் படிக்கும் தாய்மார்களும் இத்தகையதொரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டால், அது நாளைய சமூகத்துக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும்!'' என்று வேண்டுகோளாகச் சொன்னார்.
செய்வோமா?!

இதையெல்லாம் சொல்லிக் கொடுங்க!
ரோக்கிய உணவுக்காக ஊட்டச்சத்து நிபுணர் வர்ஷா சொல்லும் டிப்ஸ்...
''காய்கறிகளை சரியான வெப்பநிலையில் சேமித்து பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அவற்றிலிருக்கும் வைட்டமின்கள் சேதமாகிவிடும். காய் /  பழங்களில் தோலுக்கு அருகில்தான் வைட்டமின்களும் தாதுக்களும் இருக்கும். எனவே, தோலை மெலிதாக உரிக்க வேண்டும். காய், பழங்களை எப்போதும் கழுவிய பின் நறுக்க வேண்டும், நறுக்கியபின் கழுவினால் ஊட் டச்சத்துக்கள் வெளியேறிவிடும். புரதச்சத்து மிகுந்துள்ள அவரை, பட்டாணி, சோயாபீன்ஸ் மற்றும் பருப்பு வகை களை குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்க வேண்டும். முழு தானியங்கள், கொலஸ்ட்ராலை குறைக்க உதவு கின்றன. அதனால் தானிய வகைகளை முடிந்த அள வுக்கு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சீஸனிலும் கிடைக்கும் பழங்கள், காய் கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களைக் குழந்தை களுக்கு வாங்கித்தர வேண்டும். அவர்களை தினமும் கொஞ்ச நேரமாவது விளையாடவோ, உடல் பயிற்சி மேற்கொள்ளவோ அனுமதிக்க வேண்டும்... ஊக்குவிக்க வேண்டும். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க சொல்லித்தர வேண்டும்.''



புற்றீசல் கடைகளில் தரமற்ற மீன் உணவு பலியாகும் பயணிகள்

வேலூரில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

வேலூர்,
வேலூரில் உள்ள டாஸ்மாக் பார், ஓட்டல், தள்ளுவண்டி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
திடீர் சோதனை
வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகன்னாதன் உத்தரவின் பேரில் மாநகர உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கவுரிசுந்தர், கொளஞ்சி, சுரேஷ் ஆகியோர் நேற்று காலை வேலூர் பழைய பஸ் நிலையம், கிருபானந்த வாரியார் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டாஸ்மாக் பார்கள், தள்ளுவண்டி கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் வைக்கப்பட்டு இருந்த முறுக்கு உள்பட திண்பண்டங்கள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினார்கள்.
மேலும் ஓட்டலில் தரம் குறைவான முறையில் இருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். அங்கு 5–க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
டாஸ்மாக் பாரில் சுகாதாரமற்று இருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். பழைய பஸ் நிலையத்தில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் பழங்கள், பழரச கடைகளில் சுத்தமாக உள்ளதா? என்று சோதனை செய்தனர். மேலும் அங்கிருந்தவர்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் உணவு பொருட்கள் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.
தொடர் நடவடிக்கை
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சி பகுதியில் சுகாதாரமான முறையில் தான் உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும்’ என்றனர்.

புற்றீசல் கடைகளில் தரமற்ற மீன் உணவு பலியாகும் பயணிகள்

26- ஜன- 2014  - 21:09
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரையில், சுற்றுலாப் பயணிகளுக்கு தரமற்ற மீன் உணவுகள் விற்கப்படுகின்றன.
மாமல்லபுரத்திற்கு, ஏராளமானோர் சுற்றுலா வரும் நிலையில், அவர்களுக்காக கைவினைப்பொருள் கடைகளும் உள்ளன.
இப்பகுதியில் மீன் உணவு கடைகளுக்கும் பஞ்சமில்லை. மீன் உணவு வியாபாரம் செய்பவர்கள், முறையான உரிமம் இன்றி, தரமற்ற வகையில் தயாரித்து விற்கின்றனர்.
கடைகள் மற்றும் கடற்கரை திறந்தவெளிப் பகுதியில், தரமற்ற மசாலா, பல நாள் பயன்படுத்திய எண்ணெய் ஆகியவற்றில், மீன்
உணவுகளை தயாரிக்கின்றனர்.
பல நாட்களுக்கு முன் தயாரித்து மீதமான மீன்களையும், குளிர்சாதன
பெட்டியில் வைத்து, மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாக புகார் உள்ளது. அவற்றின் தயாரிப்பு குறித்து, அறியாத சுற்றுலாப் பயணிகள், அவற்றை விரும்பி உண்கின்றனர். இதனால், பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.
உரிமம் இன்றி நடத்தும் கடைகளை, பேரூராட்சி சுகாதார
அலுவலர்களும், கண்காணித்து நட
வடிக்கை எடுக்காததால், இத்தகைய கடைகள் புற்றீசல் போல் பெருகி வருகின்றன.
‘சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி, சுகாதார அலுவலர்கள் மீன் விற்பனை கடைகளில் ஆய்வு செய்வதோடு, கடைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

உயிரோடு மோதும் உணவு!கலப்பட பொருள் விற்பனை ‘கனஜோர்’ ‘களை’ எடுப்பார்களா அதிகாரிகள்?

கோவை :
                                                                 
உயிரோடு விளையாடும் கயவர்களை, அடையாளம் கண்டு, தண்டனை பெற்றுத்தர
வேண்டிய, உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள், வேடிக்கை பார்ப்பது தொடர்கிறது.
சாதாரண ஓட்டல்கள் முதல் பெரிய, நடுத்தர ஓட்டல்கள் வரை, பல வித உணவுகளை சமைத்து மக்களுக்கு வழங்குகின்றன. நடைபாதைக் கடைகளில், உணவு வகைகள், பாஸ்ட் புட் மற்றும் ஜங்க் புட் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த உணவு வகைகளை சாப்பிடும் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.
தரமற்ற, கலப்பட உணவை சாப்பிட்டதால் தான் பாதிப்பு ஏற்பட்டது என்று டாக்டர் கூறும்போது தான், புரிந்து கொள்ள முடிகிறது. பெருங்காயத்தில் கோந்துக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கின்றனர். சர்க்கரையில் சுண்ணாம்புத் துாளும், மஞ்சள் துாள் மற்றும் துவரம்பருப்பில் ‘மெட்டானில்’ என்ற மஞ்சள் ரசாயனமும் கலப்படமாக சேர்க்கின்றனர்.
மிளகாய்த் துாளில் மரத்துாளை நனைத்து பொடியாக்கி, நிறமேற்றி, செங்கல் பொடியையும் சேர்க்கின்றனர். காபித் தூளில் சிக்கரி, புளியங்கொட்டையை பவுடராக்கி சேர்க்கின்றனர்.
கொத்துமல்லித் துாளில் குதிரைச்சாணத் துாள் கலப்படம் செய்யப்படுகிறது. சீரகத்தில் புல்விதை, நெய்யில் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் வனஸ்பதி,
உருண்டை வெல்லத்தில் ‘மெட்டானில்’ரசாயனம், பாக்குத்துாளில் மரத்துாள், பாலில் மைதா அல்லது பார்லியை மாவு என கலப்பட பட்டியல் நீள்கிறது. இதே போல, நாம் அன்றாடம்
சாப்பிடும் மாத்திரை மற்றும் மருந்துப் பொருட்களில் போலிகள்
ஊடுருவியுள்ளன.
தரமான பொருட்களை தரமான இடத்தில் சாப்பிடுவதால் மட்டுமே, நம் உடலை நாம் பேணி பாதுகாக்க முடியும், அவசரத்துக்காகவும், பசிக்காகவும், எளிதில் கிடைக்கிறது என்பதற்காக, ரோட்டோர கடைகளில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுகிறோம்.
‘தரமற்ற, சுகாதாரமற்ற
ஓட்டல்களிலும் உணவுகளை சாப்பிட்டால், நாம் எளிதாக நோயின் பாதிப்புக்கு தள்ளப்படலாம். அதனால், மக்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பதோடு, வளரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணவு வகைகளை தான் வழங்க வேண்டும்’ என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்
குமாரசாமி கூறுகையில், ”தரமற்ற உணவுகளால், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் ஆகியவை நேரடியாக பாதிப்புக்குள்ளாகின்றன. இதை கவனிக்காமல் விட்டால், நரம்புமண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு தளர்ச்சியும், மூளைசெயலிழப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. மனிதன் வாயை பேச்சிலும், உணவிலும் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது,”என்றார்.
கலப்பட உணவுக்கு எதிரான கண்காணிப்பு ஒருபுறம் இருந்தும், தண்டனை பெற்றுத்
தர வேண்டிய, உணவுப்பாதுகாப்பு ஆய்வாளர்களும் அதிகாரிகளும், வேடிக்கை பார்ப்பது தொடர்கிறது.
‘கலப்படம் உறுதியானால் கடும் நடவடிக்கை’கோவை மண்டல உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவனிடம் கேட்டபோது, ”உணவுபாதுகாப்பு அலுவலர்கள் சரியான முறையில் ஆய்வுப்பணி மேற்கொள்கின்றனர். உணவுப்பாதுகாப்பு சட்டவிதிகளின்படி, கலப்படம் இருப்பது ஊர்ஜிதமானபின்பே நடவடிக்கை கடுமையாக இருக்கும். கால தாமதமானலும், கலப்படம் நிரூபிக்கப்பட்டால், நிரந்தரமாக உணவுப்பொருள் உற்பத்தி செய்வதை நிறுத்த முடியும்,” என்றார்.
                                   ஓட்டல் மற்றும் கடைகளில், நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருட்களில், எளிதில் கண்டுபிடிக்க முடியாத பொருட்களை, கலப்படம் செய்கின்றனர். இதை தெரிந்து கொள்ளாமல், சுவைக்காக விரும்பி சாப்பிட்டு, உடலை கெடுத்துக் கொள்கிறோம். காசு சம்பாதிக்க,

உணவுப் பாதுகாப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க கோரிக்கை- வணிகர் சங்கப் பேரமைப்பினர் மனு

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தில் வர்த்தகர்களை பாதிக்கும் அம்சங்கள் உள்ளதால், தமிழகத்தில் அதை செயல்படுத்தாமல் நிறுத்திவைக்க வேண்டும் என்று முதல்வர் தனிப்பிரிவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
மனுவில் உள்ள விவரங்கள் குறித்து கோட்டையில் நிருபர்களிடம் சங்கத் தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:மத்திய அரசு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் (2006) மற்றும் ஒழுங்குமுறை விதிகள்-2011 விரைவில் அமலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியதாக இந்த சட்டம் உள்ளது.
எனவே, சட்டத்தை முழுமையாக மாற்றி அமைத்து அதன்பிறகே சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்திடம் கடந்த 10-ம் தேதி நேரடியாக மனு கொடுக்கப்பட்டது. ‘சட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும். ஒரு வருட கால நீட்டிப்பு தரப்படும்’ என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 4-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தில் முழுமையான மாற்றங்கள் செய்யவும், மேலும் ஒரு வருட கால நீட்டிப்பு செய்யவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யவேண்டும். அதுவரை, தமிழகத்தில் இச்சட்டம் தொடர்பாக மாநில உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளதாக விக்கிரமராஜா தெரிவித்தார்.

சாலையோர உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை

மும்மடங்கு விலையில் தரமற்ற உணவு விற்பதாக புகார் கூறப்பட்ட விக்கிரவாண்டி பகுதியில் உள்ள சாலையோர உணவகங்களில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடியாக சோதனை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் புற்றீசல்கள் போல் பல்வேறு இடங்களில் உணவகங்கள் பெருகி உள்ளன.
இந்த உணவகங்களில் நீண்ட தூரப் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. அங்கு உணவுப் பொருள்கள் தரமற்று இருப்பதாகவும் மூன்று மடங்கு விலை வசூலிப்பதாகவும் பயணிகள் தரப்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.
இந் நிலையில் வியாழக்கிழமை விழுப்புரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் விக்கிரவாண்டி பகுதி சாலையோர உணவகங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
ஆய்வின்போது உணவுப் பொருள்கள் தரமாகவும், பரிமாறும் இடங்களை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து பஸ் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இந்த சாலையோர உணவகங்களில் பயணிகளின் உடலுக்கு கேடு விளைக்கும் தரமற்ற உணவுகளை மூன்று மடங்கு விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதற்கு துணை போகும் வகையில் பஸ் ஓட்டுநர்களும் அதுபோன்ற உணவகங்களில் நிறுத்துகின்றனர்.
சம்பிரதாய சோதனைகள் மூலம் இவர்களை கட்டுப்படுத்த முடியாது. தொடர் கண்காணிப்பும், கடும் நடவடிக்கையும் எடுத்தால் மட்டுமே, தரமான உணவுப் பொருள்கள் சாலையோர உணவகங்களில் சாத்தியம் என்கின்றனர் பயணிகள்.

வேலூரில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

வேலூர்,
வேலூரில் உள்ள டாஸ்மாக் பார், ஓட்டல், தள்ளுவண்டி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
திடீர் சோதனை
வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகன்னாதன் உத்தரவின் பேரில் மாநகர உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கவுரிசுந்தர், கொளஞ்சி, சுரேஷ் ஆகியோர் நேற்று காலை வேலூர் பழைய பஸ் நிலையம், கிருபானந்த வாரியார் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டாஸ்மாக் பார்கள், தள்ளுவண்டி கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் வைக்கப்பட்டு இருந்த முறுக்கு உள்பட திண்பண்டங்கள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினார்கள்.
மேலும் ஓட்டலில் தரம் குறைவான முறையில் இருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். அங்கு 5–க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
டாஸ்மாக் பாரில் சுகாதாரமற்று இருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். பழைய பஸ் நிலையத்தில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் பழங்கள், பழரச கடைகளில் சுத்தமாக உள்ளதா? என்று சோதனை செய்தனர். மேலும் அங்கிருந்தவர்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் உணவு பொருட்கள் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.
தொடர் நடவடிக்கை
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சி பகுதியில் சுகாதாரமான முறையில் தான் உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும்’ என்றனர்.

சாலையோர ஓட்டல்களில் ரெய்டு

பவானி, ஜன. 25:
பவானி, ஜம்பை பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.11 ஆயிரம் மதிப்பிலான தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோபி சப்&கலெக்டர் சந்திரசேகர சாகமுரி உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் கருணாநிதி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன், சதீஸ்குமார், ஸ்ரீனிவாஸ் கொண்ட குழுவினர் பவானி நகரில் சாலையோர உணவு விடுதிகளில் சோதனை நடத்தினர். சாலையோர ஓட்டல்கள், பஞ்சாபி உணவு விடுதிகளில் ரோட்டில் இருந்து வரும் புழுதி, உணவுப் பொருள்கள் மீது படியாமல் தடுக்க மறைப்பு கட்ட வேண்டும், உணவுப் பொருட்களைப் பாலிதீன் கவரில் அடைத்து விற்பனை செய்யக் கூடாது, பாதுகாப்பான குடிநீரை குழாயுடன் கூடிய பாத்திரத்தில் வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
உணவு விடுதியில் முறையாக பராமரிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி, தயாரிப்பு தேதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த காளான் பாக்கெட்டுகள் கைப்பற்றி அழிக்கப்பட்டன. மேலும், பாலிதீன் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட் களையும் அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். அவற்றின் மதிப்பு ரூ.11 ஆயிரம்.

மணமேல்குடியில் காலாவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல்

மணமேல்குடி, ஜன.25:
மணமேல்குடி கடை வீதியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் அதிகாரிகள் மளிகைக்கடை, டீக்கடை, குளிர்பானக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் காலாவதியான குளிர்பானங்கள், பிளாஸ்டிக் பைகள் பறிமு தல் செய்யப்பட்டு, ஊரட்சி குப்பைக்கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் கடைகளின் உரிமையாளர்களிடம் காலாவதியான பொருட்கள் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
மேலும் உணவு தொழில் புரியும் அனைத்து வணிகர்களும் வருகிற பிப்ரவரி 4ம் தேதிக்குள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.