கரூர், பிப்.15:
கரூர் பகுதிகளில் உள்ள
கடைகளில் காலாவதியான குளிர்பானங்களை உணவுபாதுகாப்பு துறை
அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்ட உணவு
பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன
அலுவலர் டாக்டர் சுரேஷ்பாபு தலைமையில் உணவு
பாதுகாப்பு அலுவலர்கள் திடீர்
சோதனை
நடத்தினர். அப்போது கரூர்
பஸ்
நிலையம், தாந்தோணிமலை, கோவை
ரோடு,
பசுபதிபாளையம், வெங்கமேடு பகுதிகளில் உள்ள
கடைகள்,
குடோன்களில் நடைபெற்ற திடீர்
சோதனையில் காலாவதியான குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், தடை
செய்யப்பட்ட குட்கா,
பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என
விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும்
பொதுமக்கள் உணவு
பொருட்கள் வாங்கும்போது பொருட்களின் தயாரிப்பு தேதி,
காலாவதி தேதியை
பார்த்து வாங்க
வேண்டும் என
விளக்கம் அளித்தனர்.