ஈரோடு,
டிச.
28:
ஈரோடு
மாவட்டத்தில் தடை
செய்ய
புகையிலை விற்பனை பரவலாக
நடந்து
வருவதாக புகார்கள் வந்தன.
இதனையடுத்து உணவு
பாதுகாப்பு நியமன
அலுவலர் கருணாநிதி தலைமையில் நேற்றிரவு பஸ்நிலையம், நாச்சியப்பா வீதி,
மேட்டூர் ரோடு,
கொங்காலம்மன் கோயில்
வீதி
பகுதி
கடைகளில் 4 குழுக்களாக பிரிந்து திடீர்
சோதனை
மேற்கொண்டனர். கடைகளில் ரூ.1.30
லட்சம்
மதிப்புள்ள தடை
செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கொங்கலாம்மன் கோயில் வீதியில் உள்ள ஒரு குடோனில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் சிறுசிறு டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் புகையி லைப் பொருட்கள் சிக்கின. அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும். இந்த சோதனையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், முருகன் கண்ணன், பூபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
No comments:
Post a Comment