பவானி உணவு விடுதிகளில் அதிகாரிகள் சோதனை

பவானி மற்றும் சுற்று வட்டார உணவு விடுதிகள், சாலையோர உணவகங்களில் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.11 ஆயிரம் மதிப்பிலான தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட நியமன அலுவலர் ஜி.கருணாநிதி தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆர்.ஸ்ரீனிவாஸ், எம்.ராஜசந்திரன், எம்.பத்மநாபன், என்.சதீஸ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பவானி, ஜம்பை பகுதிகளில் சோதனை நடத்தினர். முறையாகப் பராமரிக்கப்படாத கோழி இறைச்சி, தயாரிப்பு தேதி இல்லாத காளான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், ரோட்டிலிருந்து வரும் புழுதி, உணவுப் பொருள்கள் மீது படியாமல் தடுக்க மறைப்புக் கட்ட வேண்டும். உணவுப் பொருள்களைப் பாலித்தீன் கவரில் அடைத்து விற்பனை செய்யக் கூடாது. பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment