தேனி, நவ.23–
தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமையில்
அலுவலர்கள் தேனியில் பல்வேறு கடைகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது சுமார்
ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக அரசு தடை விதிக்கப்பட்ட போதை பாக்குகள், புகையிலை உள்ளிட்டவைகள்
கடைகளில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததை, தேனி மாவட்டத்தில் பல
இடங்களில் உள்ள கடைகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 2 மூட்டை பாக்குகள்,
புகையிலை வஸ்த்துகள் உள்ளிட்ட சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான தடை
செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment