உத்தமபாளையத்தில் அதிரடி சோதனை: கடைகளில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்

தேனிமாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள டீக்கடைகள், பலசரக்குகடைகள், பேக்கரிகள் போன்றவற்றில் கலப்பட பொருட்கள்விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. அதனை தொடர்ந்து உணவுபாதுகாப்பு அலுவலர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் உணவு ஆய்வாளர் பழனிசாமி மற்றும் அலுவலர்கள் கடைகளில் கலப்படம்செய்யப்பட்ட சைனாமிட்டாய்கள், பிரட், மற்றும் காலாவதியான குளிர்பானங்கள், திறந்தவெளிகளில் விற்பனை செய்யப்பட்ட வடைகள், போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5ஆயிரம் ஆகும்.
மேலும் அனைத்து கடைகளிலும் தடைசெய்யப்பட்ட மிட்டாய்கள், கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

No comments:

Post a Comment