ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெறாத 11 குடிநீர் நிறுவனங்களுக்கு தடை

இந்திய தரச் சான்றிதழ்(ஐ.எஸ்.ஓ) பெறாமல், மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 11 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்.
ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெறாத மூலிகை மற்றும் சுவையூட்டப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 30 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டி.குணசேகரன் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் சான்று பெறாமல் செயல்பட்ட 11 நிறுவனங்களுக்கு தடைவிதித்து, சீல் வைக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல்லில் 1, நத்தத்தில் 2, ஒட்டன்சத்திரத்தில் 1, ரெட்டியார் சத்திரத்தில் 2, பழனியில் 5 என மொத்தம் 11 நிறுவனங்களின் மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment