திருவட்டாறு பகுதியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை

திருவட்டாறு மற்றும் குலசேகரம் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தி காலாவதியான உணவுப் பொருள்களை கைப்பற்றி அழித்தனர்.
மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் சாலோடீசன் தலைமையில் அலுவலர்கள் குலசேகரம் சந்தை, நாகக்கோடு மற்றும் திருவட்டாறு பகுதிகளிலுள்ள கடைகளில்  விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கலப்பட தேயிலைகள், காலாவதியான திண்பண்டங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி அழித்தனர்.
மேலும் திருவட்டாறு பகுதியில் பால் வினியோகம் செய்த நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பாலில் அளவுக்கதிகமாக தண்ணீர் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தப் பால் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.

No comments:

Post a Comment