இளையான்குடியில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இளையான்குடியில் திங்கள்கிழமை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன
அலுவலர் அருள்நம்பி, அலுவலர்கள் ப.ஜெய்சங்கர், கோவிந்தன், உதயராஜ்,
ஜோதிபாசு ,ராஜேஷ் ஆகியோர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும்
காலாவதியான பொருள்கள் விற்பனைக்கு உள்ளதா என்பது குறித்து திடீர் ஆய்வு
மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை
பொருள்கள், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கலப்பட டீத்தூள் ஆகியவற்றை பறிமுதல்
செய்து அழித்தனர்.
No comments:
Post a Comment