உத்தமபாளையம், நவ.19:
தேனி
மாவட்டத்தில் தடை
செய்யப்பட்ட பான்பராக் விற்பனை படுஜோராக நடந்து
வருகிறது.
தேனி
மாவட்டத்தில் சின்னமனூர், கம்பம்,
உத்தமபாளையம், தேனி,
போடி
பகுதிகளில் வர்த்தகம் அதிகளவு நடைபெறுகிறது. இங்கு
உடலுக்கு தீங்கு
விளைவிக்கும் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது
உணவு
பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு
செய்து
வருகின்றனர். இதற்காக மாவட்ட
அளவில்
உணவு
பாதுகாப்புத்துறை அலுவலர் உள்ளார். தமிழகத்தில் கடந்த
சில
நாட்களுக்கு முன்பு
பான்
மசாலா,
புகையிலை பொருட்களை விற்க
தமிழக
அரசு
தடை
விதித்தது.
ஆனால்
தடையை
மீறி
பல
இடங்களில் பான்
மசாலா
பொருட்கள் விற்பனையாகி வருகின்றன. நாள்தோறும் மூடை,
மூடையாக தேனி
மாவட்டத்திற்கு இந்த
பொருட்கள் சப்ளை
செய்யப்படுகின்றன. இதனை
அதிகாரிகள் கண்டும், காணாதது போல
உள்ளனர். கடைகளில் அடிக்கடி ஆய்வு
செய்து
பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும்
அயோடின் கலக்காத உப்பு,
அசைவ
ஓட்டல்களில் அஜினமோட்டா கலந்த
உணவுகள் விற்கப்படுகின்றன. இதுதொடர்பாகவும் எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இதுகுறித்து தமிழக
முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ள மனு:
தேனிமாவட்டத்தில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கையால் கலப்பட
பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. தடைசெய்யப்பட்ட பான்பராக், பான்மசாலா, விற்பனைக்கும் பஞ்சமில்லை. எனவே
இதனை
தடுத்திட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment