அங்கன்வாடி பணியாளர்களுக்கு சுகாதார பயிற்சி முகாம்

பாபநாசம். : பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சுப்பையன், மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் அங்கன் வாடி மையப்பணியாளர்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
வட்டார வளர்ச்சித் திட்ட அலுவலர் தேவகி முன்னிலையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ண மூர்த்தி பயிற்சியளித்தார்.
இதில் அங்கன்வாடி மையத்தை தூய்மையாக வைத்திருக்கவும், பணியாளர்கள் சுத்தமாக இருக்கவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் கூறப்பட்டது. மேற்பார்வையாளர்கள் மரகதம், பிலோமினா, வட்டார அங்கன்வாடி மையப்பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment