கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டி : -
                                                                                                     கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சார்ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சார்ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் கடலை மிட்டாய் தயாரிக்கும் இடங்களின் வரைபடங்கள், கடலை மிட்டாயின் மூலப் பொருள்கள் பற்றிய விவரங்கள், மூலப் பொருள்கள் கிடைக்கும் இடங்கள், கடலை மிட்டாயின் சிறப்பம்சங்கள், தரம், உணவு பாதுகாப்பு அலுவலர்களின் அறிக்கை ஆகியவற்றை ஒரு வாரத்துக்குள் முறையான விண்ணப்பத்துடன் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாக ஆராய்ந்து புவிசார் குறியீடு ஆய்வு மையத்துக்கு அனுப்பி, புவிசார் குறியீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment