கல்வி தகுதியின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

தர்மபுரி, ஜூன்.23-
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சங்கம் மாநில நிர்வாகிகள் பேரவை கூட்டம் தர்மபுரியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் போஸ் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமஜெயம் வரவேற்று பேசினார். மாநில பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ரவிசந்திரன் அறிக்கை வாசித்தார். தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தினேஷ், சத்துணவு பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட செயலாளர் சேகர், மாநில நிர்வாகி கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார். உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு உடனடியாக பணியமைப்பு விதிகள் உருவாக்க வேண்டும். கல்வி தகுதியின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சந்திரன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment