சென்னை, ஜூன் 4 :
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற
கடைக்காரர் உட்பட
4 பேர்
கைது
செய்யப்பட்டனர்.
கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் பழண்டியம்மன் கோயில்
தெருவில் உள்ள
பீடா
கடையில் அரசால்
தடை
செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பரங்கிமலை துணை
கமிஷனர் சரவணனுக்கு புகார்
வந்தது.
இதைதொடர்ந்து அவரது
உத்தரவின் பேரில்
ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தளவாய்சாமி மற்றும் தனிப்படை போலீசார் நேற்று
காலை
அந்த
கடைக்கு சென்று
சோதனையில் ஈடுபட்டனர். அங்கு
20 கிலோ
மாவா,
2,000 பாக்கெட் ஹன்ஸ்,
பாக்கு
75 பாக்கெட், சுண்ணாம்பு மற்றும் புகையிலை, 2 கிரைண்டர், ரூ.20
ஆயிரம்
உள்பட
ரூ.
1 லட்சம்
மதிப்பிலான பொருட்
களை
பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கடை
உரிமையாளர் பங்கஜ்குமார் (33), பப்புபசால் (21), தர்மேந்திர குமார்
(26), ராஜ்குமார் (21) ஆகிய
4 பேரை
கைது
செய்த்னர். அவர்களை போதை
பொருள்
மற்றும் புகையிலை தடுப்பு பிரிவு
போலீசார், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்
சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment