தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது

கம்பம், ஜூன் 27:
கம்பத்தில், பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர். மேலும், புகை பிடித்த ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கம்பம் முக்தி விநாயகர் பள்ளி அருகே, கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்து.
இதனையடுத்து, எஸ்ஐ.திருமாமுருகன் தலைமையில் போலீசார் அப்பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். இதில், கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டை சேர்ந்த சிவராமன் மகன் மணிகண்டபிரபு(32), ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்த முத்துராஜ் மகன் சரவணன்(36) ஆகியோர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்

No comments:

Post a Comment