மாங்காய் மண்டிகளில் அதிகாரிகள் ஆய்வு

குடியாத்தம் நகராட்சி துப்புரவு அலுவலர் எஸ். ராஜரத்தினம், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் முனியராஜ் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மாங்காய் மண்டிகளி
குடியாத்தம் நகராட்சி துப்புரவு அலுவலர் எஸ். ராஜரத்தினம், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் முனியராஜ் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மாங்காய் மண்டிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
தரணம்பேட்டை, ஆலியார் தெரு, உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் உள்ள மாங்காய் மண்டிகளில் அவர்கள் ஆய்வு நடத்தினர். மாங்காய்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறதா என்பது குறித்து அவர்கள் சோதனை நடத்தினர்.
துப்புரவு ஆய்வாளர் ப. நாகராஜ், களப்பணி உதவியாளர் கொ. பிரபுதாஸ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் டி. பென்னிஜோசப், எம்.எம். மூர்த்தி, என். தயாளன், கே. கல்யாணி, சி. ஜெகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment