வணிகர் தினத்தை முன்னிட்டு மே 5லிஆம் தேதி திருநெல்வேலியில் சுதேசி
பாதுகாப்பு மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை
தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், 31 லிஆவது வணிகர் தின
விழா மே 5 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் சுதேசி பாதுகாப்பு மாநாடாக
திருநெல்வேலி பொருள்காட்சி திடலில் தொடங்குகிறது. இரவு 7 மணி வரை மாநாடு
நடைபெறுகிறது. காலை 10 மணியளவில் பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. வணிகர்
குடும்ப குழந்தைகள் நடத்தும் சுதேசி கலை நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1
மணியளவில் மாநாடு தொடங்குகிறது.
மாநாட்டுக்கு நான் தலைமை வகிக்கிறேன். பொது செயலாளர் கே.தேவராஜ்
முன்னிலை வகிக்கிறார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய வர்த்தக சங்க
தலைவர் ஷியாம் பிகாரி, பொதுச் செயலாளர் விஜய் பிரகாஷ் ஜெயின் மற்றும் பிற
மாநில வணிகர் சங்கத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விலைவாசி உயர்வு, உணவு பாதுகாப்பு தர சட்டம்,
ஆன்லைன் வர்த்தக சூதாட்டத்துக்கு காரணமான உலக வர்த்தக ஒப்பந்தத்தில்
இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில்
நிறைவேற்றப்படுகின்றன என்றார் அவர்.
No comments:
Post a Comment