போதை பொருட்கள் விற்பனை வாழப்பாடியில் அதிரடி ஆய்வு

வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில், போதை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக, 26 பேர் மீது, போலீஸார் வழக்குபதிவு செய்தனர். வாழப்பாடி, காரிப்பட்டி, ஏத்தாப்பூர், கருமந்துறை மற்றும் கரியகோவில் பகுதியில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட போதை பொருட்களான, பான்பராக், குட்கா, ஹான்ஸ் ஆகியவை விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, போலீஸார் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். வாழப்பாடியில், போதை பொருட்களை விற்பனை செய்த இளையராஜா, 31, மேட்டுடையார் பாளையம் திருமுருகன், 32, பேளூர் பிரிவுரோடு சரவணன், 32, குமார், 30, ராமச்சந்திரன், 47, பெரியசாமி, 70, சரவணன், 36, எழில்நகர் சவுந்திரராஜன், 50, கிருஷ்ணராஜ், 33, முத்துகவுண்டர், 64, சரவணன், 29, ஆகிய ஒன்பது பேர் மீது, வாழப்பாடி போலீஸார் வழக்குபதிவு செய்தனர். காரிப்பட்டி பகுதியில், போதை பொருட்களை விற்பனை செய்ததாக, சுந்தர்சிங், 50, வேதம்மாள், 48, மல்லிகா, 47, ராஜம்மாள், 68, தங்கவேல், 63, ஆகிய ஐந்து பேர் மீதும், ஏத்தாப்பூர் பகுதியில் சீனிவாசன், 33, தியாகராஜன், 30, ஜெயராமன், 58, பழனிமுத்து, 40, சசிகுமார், 26, ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கருமந்துறை பகுதியில், தீர்த்தன், 40, ஜெயபிரபு, 54, ரத்தினம், 27, பாஸ்கரன், 24. சின்னையன், 40, ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment