பான்பராக், குட்கா விற்ற 7 பேர் மீது வழக்குபதிவு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி மற்றும் மல்லூரில், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்த ஏழு பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தமிழகத்தில், பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற போதை தரும் பொருட்கள், புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மளிகைக் கடைகள், பீடா கடைகள், டீக்கடைகளில், இவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பனமரத்துப்பட்டி பஸ் ஸ்டாண்ட், திருவள்ளுவர் சாலை, இச்சமரம், காந்தி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், பீடா கடைகள், டீக்கடைகளில், பனமரத்துப்பட்டி போலீஸார், அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, விற்பனை செய்ய, பதுக்கி வைத்திருந்த பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்களை, போலீஸார் பறிமுதல் செய்தனர்.
* மல்லூர் பஸ் ஸ்டாண்ட், வீரபாண்டி ரோடு, மேட்டூர் ரோடு, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் உள்ள மளிகைக் கடைகள், டீக்கடைகள், பீடா ஸ்டால்களில், போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, ஏழு பேர் மீது, போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



No comments:

Post a Comment