ஆத்தூரில் குட்கா, போதை பொருட்கள் விற்ற 10 பேர் மீது வழக்கு

ஆத்தூரில் தடைசெய்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட், கடை வீதி, ராணிப்பேட்டை, முள்ளுவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பீடாக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் பராக், சாந்தி உள்ளிட்ட குட்கா பாக்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக ஆத்துர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நேற்று ஆத்தூர் எஸ்ஐ பழனியம்மாள் தலைமையிலான போலீசார் ஆத்தூர் நகரில் உள்ள பீடாக்கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இது தொடர்பாக 10 கடைகாரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.    

No comments:

Post a Comment