பேராவூரணி, பிப்.16:
பேராவூரணி கடைவீதியில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர்
ஆய்வு
மேற்கொண்டனர்.
காலாவதியான குளிர்பானத்தை
அருந்திய கடலூர்
மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி
உயிரிழந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் காலாவதியான குளிர்பானங்கள், கெட்டுப்போன உணவு
பொருட்கள், பாக்கெட் நொறுக்குதீணிகள் விற்பனை செய்யப்படுகிறதா? என
மாநில
உணவு
பாதுகாப்பு ஆணை
யர்
உத்தரவிட்டுள்ளார். அதன்படி தஞ்சை
மாவட்ட
கலெக்டர் சுப்பையன் ஆலோசனையின்பேரில் மாவட்ட
நியமன
அலுவலர் தெட்சிணாமூர்த்தி உத்தரவின்பேரில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் உணவு
பாதுகாப்பு அதிகாரிகள் பெட்டிகடைகள், குளிர்
பான
கடைகள்,
உணவகங்களில் ஆய்வு
மேற்கொண்டனர்.
பேராவூரணி கடைவீதியில் வட்டார
உணவு
பாதுகாப்பு அலுவலர் ரமாராமநாதன் ஆய்வு
நடத்தி
காலாவதியான குளிர்பானங்கள், உணவு
பொருட்களை விற்பனை செய்தால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என
எச்சரித்தார். இதேபோல் சேதுபாவாசத்திரம் வட்டார
உணவு
பாதுகாப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஒன்றிய
பகுதிகளில் ஆய்வு
செய்தார்.
No comments:
Post a Comment