முசாபர் நகர்:
உ.பி.,யின் முசாபர்நகர் பகுதியில், காய்கறிகளின் நிறத்தை, வண்ணத்தை
பயன்படுத்தி மாற்றி, அதிக விலைக்கு விற்ற, மதன்லால் என்ற வியாபாரி, 2010ல்,
உணவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அது குறித்த வழக்கு, முசாபர்நகர்,
கூடுதல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று இந்த
வழக்கில், நீதிபதி, கே.பி.சிங் பிறப்பித்த உத்தரவில், அந்த கலப்பட
வியாபாரிக்கு, பத்தாண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும்
விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment