தர்மபுரி, பிப்.16:
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை
மாவட்ட
நியமன
அலுவலர் டாக்டர் தினேஷ்
தலைமையில் உணவு
பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று
தர்மபுரி நகரில்
பேருந்து நிலையம், கடைவீதி, பென்னாகரம் சாலை,
திருப்பத்தூர் ரோடு
ஆகிய
பகுதிகளில் 10க்கும்
மேற்பட்ட மளிகை
கடை,
டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் மற்றும் அவற்றின் குடோன்களில் திடீர்
சோதனை
நடத்தினர்.
இந்த சோதனையில் காலாவதியான குளிர்பானங்கள், மாவு,
லேபிள்
இன்றி
விற்பனை செய்த
எண்ணெய், பேக்கிங் இல்லாமல் விற்பனை செய்த
எண்ணெய் உள்ளிட்ட ஒரு
லட்சம்
மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்த சோதனையின் போது,
உணவு
பாதுகாப்பு அலுவலர்கள் கோபிநாத், சேகர்,
குமணன்,
நாகராஜன், நந்தகோபால் உள்ளிட்டவர்கள் உடன்
இருந்தனர்.
No comments:
Post a Comment