டீ கடை பெஞ்ச்

''பழநியில் வசூல் வேட்டை பலமா நடக்கறது ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.

''
என்ன பிரச்னை வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின்படி, எல்லா பொருட்களிலும் தரத்தைப் பின்பற்றச் சொல்லி, மத்திய அரசு, காலக்கெடு விதிச்சிச்சு... இப்ப, அந்த காலக்கெடு முடிஞ்சு போச்சுன்னு சொல்லி, உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள், 1,000 முதல், 3,000 ரூபாய் வரை, லஞ்சம் வசூலிக்கறதா, குற்றச்சாட்டு எழுந்திருக்கு... சமீபத்தில், பழநிக்கு வந்த வணிகர் சங்க பேரமைப்பு, மாநில தலைவர் விக்கிரம ராஜாவிடம், இது குறித்து, வியாபாரிகள் புகார் சொன்னா...

''
யாருக்கும் லஞ்சம் தரவேண்டாம், பழநி லஞ்ச விஷயத்தை, வணிகர் பேரவை சார்பில், உயர்  அதிகாரிகளிடம் புகார் செய்யறேன்னு, விக்ரம ராஜா சொல்லிட்டார்... என்ன நடக்கறதுன்னு பார்ப்போம்...'' எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.

No comments:

Post a Comment