தேனி: வெயில் படும் போது,
பிளாஸ்டிக்கில் இருந்து தண்ணீருக்குள் செல்லும்
"டயாக்ஸின்” நச்சுப்பொருளால், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்
அபாயம் ஏற்படுகிறது. எனவே வெயிலில் வைக்கப்பட்டுள்ள
பிளாஸ்டிக் கேன்களை வாங்கி குடிக்காதீர்கள்,
என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில், குடிநீர் முழுக்க பிளாஸ்டிக் கேன்களிலேயே
விநியோகம் செய்யப்படுகிறது. கடைகளில் ஒரு லிட்டர், இரண்டு
லிட்டர் பாட்டில்களிலும், வீடுகளுக்கு 20 லிட்டர் கேன்களிலும், சப்ளை
செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் அபாயம் உணர்ந்த பெரிய
கம்பெனிகள் தங்களது தயாரிப்புகளை அட்டைப்பெட்டிக்குள்
அடைத்து பக்குவமான முறையில் சப்ளை செய்கின்றனர். கடைக்காரர்களுக்கு,
அதன் அபாயம் புரியவில்லை. எனவே
கேன்களை கடை முன் வெயிலில்
அடுக்கி வைக்கின்றனர். அதேபோல் வீடுகளுக்கு சப்ளை
செய்யப்படும், பிளாஸ்டிக் கேன்களையும் வேன்களில் ஏற்றி பல மணி
நேரம் அந்த வேன்களை வெயிலில்
நிறுத்தி விடுகின்றனர். பிரச்னை இங்கு தான்
தொடங்குகிறது. வெயிலில், சில மணி நேரம்
பிளாஸ்டிக் கேன்களை வைத்திருக்கும் போது,
பிளாஸ்டிக்கில் இருந்து, "டயாக்ஸின்” என்ற நச்சுப்பொருள் வெளியேறி
குடிநீரில் கலந்து விடுகிறது. இந்த
நீரை குடித்தால், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள்
உடல் உபாதைகள் ஏற்படும், அபாயங்கள் உள்ளன.
இது குறித்து, டாக்டர் ராஜ்குமார் கூறியதாவது:
"டயாக்ஸின்” நச்சுப்பொருள் பிளாஸ்டிக் கேன்களின் வெயில் படும் போதெல்லாம்
உருவாகும். இந்த நச்சுப்பொருள் கேனின்
தன்மைக்கும் தரத்திற்கும், ஏற்ப அதிகமாகவோ, குறைவாகவோ
உருவாகும். எவ்வளவு நச்சு உருவானாலும்,
இதனை குடிப்பதால் ஆபத்து தான்.இதனால்
பிளாஸ்டிக் கேன்களை வெயில் படாத
இடங்களில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
நம்மிடம் அந்த கேன் வந்து
சேரும் முன் பல மணி
நேரம் வெயிலில் இருந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு.
அது நமக்கு தெரியாமல் போகும்.
எனவே முடிந்த அளவு பிளாஸ்டிக்
கேன்களை தவிர்த்து விட்டு, கண்ணாடி அல்லது
சில்வர் பாட்டில்களை பயன்படுத்துவது சிறந்தது.
அதேபோல், கார்களை வெயிலில் நிறுத்தியிருக்கும்
போது, காருக்குள் இருக்கும் பிளாஸ்டிக்கில் இருந்து "பென்சீன்” என்ற வேதிப்பொருள் உருவாகி
காருக்குள் உள்ள காற்றில் கலந்திருக்கும்.
நாம் காருக்குள் அமர்ந்து உடனே "ஏசி”யை ஆன்
செய்து, கார் கதவுகளை மூடி
விட்டால், அந்த நச்சு கலந்த
காற்று வெளியேற வழியின்றி, நம்
உடலுக்குள் சென்று பல்வேறு உபாதைகளை
ஏற்படுத்தும். எனவே காரை வெயிலில்
நிறுத்தினால், சிறிது நேரம் "ஏசி”யை ஆன் செய்து,
காருக்குள் உள்ள நச்சு காற்று
முழுவதும் வெளியேறும் வரை கதவுகளை திறந்து
வைத்திருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment